செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று புதிதாக 2,458 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 10 பேர் சிிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

Update: 2021-05-08 15:00 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 1,470 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 790 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1032-ஆக உயர்ந்தது. இதில் 94 ஆயிரத்து 964 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News