செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-03-23 03:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரொனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 347-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 801-ஆக உயர்ந்தது. 750 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



Tags:    

Similar News