கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் கொரோனா பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

Update: 2021-04-16 02:00 GMT

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சேரா மற்றும் செங்கை நகர காவல் ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வாகன சோதனையின் போது அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் முககவசம் இன்றி பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  

Tags:    

Similar News