செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய மழை

தமிழகத்கில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Update: 2021-08-01 00:00 GMT

செங்கல்பட்டில் விடிய விடிய மழை

வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. செங்கல்பட்டு மற்றும் சென்னையை பொருத்தவரையில் இரவுக்கு மேல் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது  

செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. செங்கல்பட்டு மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், சென்னையை ஒட்டியுள்ள, தாம்பரம் பல்லாவரம், ஆலந்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

Tags:    

Similar News