செங்கல்பட்டு அருகே கொரோனா தொற்றுக்கு பள்ளி மாணவி உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார்.

Update: 2021-06-07 15:06 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குழந்தை தொற்று காரணமாக பள்ளி மாணவி உயிரிழந்தது பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைமலை நகர் கீழ் கரணை எம்ஜிஆர் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கிய செல்வி இவர் மறைமலைநகரில் உள்ள சென் ஜோசப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மகளான ஸ்ருதி அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஸ்ருதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பொத்தேரியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த தனியார் மருத்துவமனையிலேயே மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். பள்ளி மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News