செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் அடித்துக் கொலை

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-06-15 15:13 GMT

கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில் வசித்து வருபவர் டில்லி. இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருபவர் ராஜேஷ் (வயது 22). இவர் கடந்த சில மாதங்களாகவே அச்சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை கடைக்குச் சென்று வந்த சிறுமியை ராஜேஷ் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவரது தந்தை டில்லி வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சிறுமியின் தந்தை டில்லி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News