செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 237 மி.மீ மழை பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 237 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-07-18 05:57 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், கேளம்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை இடி மின்னலுடன் மிதமான மற்றும் கன மழை பெய்தது.

கடந்த 24 மணி நேர நிலவரப்படி,  அதிகபட்சமாக செய்யூரில் 93. 4 மில்லி மீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 55 மில்லி மீட்டர் மழையும், திருப்போரூரில் 17.2 மில்லி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 20.7 மில்லி மீட்டர் மழையும், மகாபலிபுரத்தில் 11.4 மில்லி மீட்டர் மழையும், தாம்பரத்தில் 19 மில்லி மீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 16.4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News