செங்கல்பட்டு மாவட்டத்தில் 188.7 மி.மீ. மழைப்பதிவு

விடிய விடிய மழை பெய்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 188.7 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

Update: 2021-10-03 03:00 GMT
கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செங்கல்பட்டில் நேற்று இரவு சுமாா் 1.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: திருப்போரூர்-6.3, மி.மீ, செங்கல்பட்டு-19, மி.மீ, திருக்கழுக்குன்றம்-14.2 மி.மீ, மாமல்லபுரம்-11 மி.மீ, மதுராந்தகம்-61 மி.மீ, செய்யூர்-49, மி.மீ, தாம்பரம்-1.4, மி.மீ, கேளம்பாக்கம்- 26.8 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 188.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News