செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் 333.5 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 12 மணிநேரத்தில் 333.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-10-05 14:30 GMT

கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 12 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

காலை 6 மணிமுதல், மாலை 6 மணி வரை மழை காரணமாக, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல்,  மாலை 6 மணிவரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 41, மி.மீ, திருப்போரூர்-46.1, மி.மீ, திருக்கழுக்குன்றம்-41.1 மி.மீ, மாமல்லபுரம்-46.4 மி.மீ, மதுராந்தகம்-35 மி.மீ, செய்யூர்-54.5, மி.மீ, தாம்பரம்-66.8, மி.மீ, மழை என மாவட்டத்தில் மொத்தம் 333.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News