செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டில் நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு 8 மணிக்கு தொடங்கி, விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஒருசில இடங்களில், வீடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியது.
இரவில் மழையானது மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து. சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் தீபாவளி வியாபாரம் பாதிக்குமோ என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.