செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில், விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு முதல், இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது.
இந்த மழையானது, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை வரை தொடர்ந்தது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.தொடர் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுமார் 5 மணிநேரம் இடைவிடாது பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.