செங்கல்பட்டில் புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை, நூறு ரூபாயை தாண்டியது

செங்கல்பட்டில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டது. லிட்டர் ரூ 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படடுகிறது.

Update: 2021-06-27 03:45 GMT
செங்கல்பட்டில் பெட்ரோல் விலை ரூ நூறைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு100.09 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.03ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுதான் வருகிறது.

அந்த வகையில் இன்றயை நிலவரப்படி புதிய உச்சம் தொட்டு செங்கல்பட்டு மாவட்டதில்  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டர் 100.09ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.03 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது, இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

Tags:    

Similar News