மிரட்டுகிறது மழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 ஏரிகள் 100% நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 75 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

Update: 2021-11-07 06:00 GMT

கோப்பு படம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும்,  ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 75 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.  75 சதவீதத்துக்கு மேல் 72 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 116 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 184 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 81 ஏரிகள் நிரம்பிவிட்டன.  ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News