செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1,302 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-05-26 15:15 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 33,ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 2,149 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 பேரில் 4 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 432 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1617-ஆக உயர்ந்தது. தற்போது  1லட்சத்து 33 ஆயிரத்து 825 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News