செங்கல்பட்டு: ஒரே நாளில் 1142 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-04-27 03:30 GMT

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கட்கிழமை(26-04-21) ஒரே நாளில் 1142 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 64 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 915-ஆக உயர்ந்தது. 8ஆயிரத்து 848 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News