செங்கல்பட்டு: 1181 பேருக்கு கொரோனா -8 பேர் பலி

செங்கல்பட்டில் இன்று 1181 பேர் கொரோனாவால் பாதிப்பு 8 பேர் பலி

Update: 2021-04-27 16:15 GMT

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 275 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 64 ஆயிரத்து 744 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 923-ஆக உயர்ந்தது. 8ஆயிரத்து 608 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News