பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-07-15 23:56 GMT

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்காக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை தமிழக மாநில தலைவராக மத்திய அரசு அறிவித்தது 

 சென்னை கமலாலயத்தில் பதவியேற்கவுள்ள நிலையில் திருவண்ணாமலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும் பல்வேறு  இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, ஆகிய இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மலர்தூவி, மாலை அணிவித்து கற்பூரம் ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் சித்தாந்த அடிப்படையில் உள்ளதாகவும் தேசியம் ஆன்மீகம் இரண்டையும் மையமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது  தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்கிறது.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் ஒரு பானை சாதத்திற்கு ஒரு சாதம் பதம் அதுபோல தற்பொழுது  4 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 150 எம்எல்ஏக்களை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்.  அதுவரை பாஜகவினருக்கு ஓய்வு கிடையாது எனவும் கட்சியில் உள்ள அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News