செங்கல்பட்டில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Update: 2021-07-31 06:15 GMT

செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆப்பூர், ரெட்டிப்பாளையம், குருவன்மேடு உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பங்கேற்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒரே வார்டில் பலர் போட்டியிடாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தின் சார்பில் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஆட்சி இல்லையே என்று எண்ணி இருக்காமல், மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News