திருவிழா கூட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது

செங்கல்பட்டில் திருவிழா கூட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-26 11:00 GMT

கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுடன் காவல் துறையினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேலகோட்டையூர் அம்மன் கோயிலில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது எட்டு பெண்களிடமிருந்து தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது. இது குறித்து எட்டு பேரும் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மணிமங்கலத்தை சேர்ந்த பாண்டீஸ்வரி(25), என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து 47 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இவருடன் 3 பேர் சேர்ந்து இச்சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், சேலம் வீராணம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இப்பெண் மீது செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேளம்பாக்கத்திலும் இதே போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News