சுதந்திரதின பவளவிழா மராத்தான் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Update: 2021-09-11 09:05 GMT

செங்கல்பட்டில் சுதந்திரதின பவளவிழா மராத்தான் போட்டியை துவக்கிவைத்த ஆட்சியர் ஆ.ராகுல்நாத்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பவள விழாவாக நாடுமுழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக  செங்கல்பட்டில், தமிழக அரசு மற்றும் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில், 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்.

மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் போட்டியை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை உற்சாகபடுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொருப்பு) லஷ்மணன், வருவாய் கோட்டாட்சியர் சாஹிதாபர்வீன், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News