தெலுங்கானாவில் முன்னாள், வருங்கால முதல்வர்களை தோற்கடித்த பா.ஜ. வேட்பாளர்

தெலுங்கானாவில் முன்னாள், வருங்கால முதல்வர்களை தோற்கடித்த பா.ஜ. வேட்பாளர் பற்றிய ருசிகர தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-12-03 15:37 GMT
தெலுங்கானாவில் முன்னாள், வருங்கால முதல்வர்களை வீழ்த்திய பா.ஜ.க. வின் வெங்கடரமணா ரெட்டி.

தெலுங்கானா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர், வருங்கால முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் பா.ஜ.க. வேட்பாளர் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை பெற தொடங்கியது. மாலை நிலவரப்படி  64 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க தகுதி பெற்று உள்ளது.

அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவின் கமாரெட்டி தொகுதியில் பி.ஆர்.எஸ் சார்பில் முதல் மந்திரி கே.சி.ஆர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ரேவந்த்ரெட்டியும், பா.ஜ.க. சார்பில் வெங்கட ரமண ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி சுமார் 6,741 வாக்குகள் வித்தியாசத்தில்ரேவந்த் ரெட்டியையும்  11,736 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் தோல்வியால் முதல் அமைச்சர் பதவியை இழந்துள்ள கேசிஆர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். இதில் ஒரு தொகுதியில் வெற்றியும் இன்னொரு தொகுதியில் தோல்வியையும் தழுவி உள்ளார். தெலுங்கானாவை பொறுத்தவரை பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் தொகுதிகள் சிங்கிள் டிஜிட்டை தாண்டவில்லை. ஆனாலும் அந்த கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்னாள் முதல்வர், வருங்கால முதல்வர் என இருவரையும் வீழ்த்தி இருப்பது அம்மாநில தேர்தலில் ருசிகர தகவலாக வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News