உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!

பலருக்கு தனிமை சோகம் சுமக்கும் சுமை. ஆனால் சிலருக்கு அது ஞானம் தரும் புத்தகம். உறவுகளோடு குழுமி இருப்போருக்கு தனிமை சாபம்.

Update: 2024-05-08 10:35 GMT

loneliness quotes in tamil-தனிமை மேற்கோள்கள் (கோப்பு படம்)

Loneliness Quotes in Tamil

தனிமையின் கூரிய முள் உள்ளத்தில் இறங்கும்போது ஏற்படும் வேதனை ஒரு தனி வலியாகத் தோன்றும். சிலர் அதைச் சுமக்கின்றனர், சிலர் அதில் மூழ்கி விடுகின்றனர். கவிஞர்களும், எழுத்தாளர்களும் பல நூற்றாண்டுகளாக இந்த உணர்வின் ஆழத்தை அலசி ஆய்வு கொண்டே இருக்கின்றனர்.

தனிமையின் பல்வேறு பரிமாணங்களில் – ஏக்கம், சோகம், சில நேரம் விடுதலை உணர்வு கூட – இருக்கலாம். அவைகளை உணரும் சில தனிமையின் வலி கவிதை வரிகளை இங்கே தொகுத்துள்ளோம். படிப்போமா..வாங்க..!

Loneliness Quotes in Tamil

தனிமையின் வலி – தமிழ்க் கவிதைகள்

"கூட்டை விட்டுப் பிரிந்த பறவை போலே…கூடு தேடி அலைகின்றேன்"

"தனிமை என்னும் தனித் தீவில் நான்…தத்தளிக்கும் கப்பலோ கரையே இல்லை"

"சிந்தையில் நீ, நினைவில் நீ…எங்கும் நீ…அருகில் மட்டும் நீயில்லை"

"வார்த்தைகள் கூட வறண்டு போகும்…இந்தத் தனிமையின் வனாந்திரத்தில்"

"இரவு தரும் இதயக் கனம்…கூடவே வரும் தனிமை என்னும் தோழன்"


Loneliness Quotes in Tamil

"கண்ணீரைத் துடைக்கக் கைகள் கூட இல்லை…அட, இது தான் தனிமையின் கொடுமை"

"தனிமை ஒரு தவம்…தாங்க முடியாத துயரம்"

"கண்ணாடியில் என் பிம்பம்…அதுவும் சிரிப்பதில்லை, தனிமையின் சோகம் தொற்றிக் கொண்டதால்"

"நிலவின் வெளிச்சத்தில் நனையும் நிழல் மட்டும் துணை"

"மௌனமே என் மொழி…தனிமையே என் உலகம்"

Loneliness Quotes in Tamil


"சுற்றிலும் கூட்டம்…உள்ளுக்குள் தனித்தீவு"

"என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாருமில்லை…மௌனம் மட்டுமே துணையாக"

"நான் அழைக்கக் காத்திருக்கும் குரல் ஒன்றுமில்லை இந்த உலகில்"

"கூடவே நடக்கும் என் நிழலுடன் மட்டும் தான் என் உரையாடல்"

"உடைந்து போன இதயத் துண்டுகள்…தனிமையின் கண்ணாடிச் சிதறல்கள்"

Loneliness Quotes in Tamil

"காதில் விழும் இசை கூட சோக ராகமாக…மேலும் என்னை வருத்துகிறதே.."

"மனம் ஒரு காய்ந்த மரம்…தனிமை அதன் இலை உதிர்ந்த கிளை"

"தனிமையின் சுவர்கள்…பேதமை எனும் பூச்சு"

"சொல்லித் தீராத வலிகள்…கேட்க யாருமில்லா ஏக்கம்"

"கூட்டில் அடைபட்ட என் ஆன்மா…விடுதலை தேடி துடிக்கிறது"


Loneliness Quotes in Tamil

"இந்த வெறுமை என்னை விழுங்கி விடும்…தனிமையின் ரணம் எனக்குள் விரிகிறது"

"நினைவுகளின் பக்கங்களைப் புரட்டுகிறேன்…வலியின் வரிகள் மட்டுமே அதிகமாய் மிஞ்சுகிறது"

"கண்ணீர் கூட எனக்கு துரோகம் செய்து விட்டதோ…? அது கூட வரமறுக்கிறதே..?!"

"இந்த உலகில் நான் ஒரு துளி…கடலில் கரைவதைப் போல தனிமையில் கரைகிறேன்"

"ரசித்த முகங்கள் எல்லாம் எங்கோ மறைந்து விட்டன"

Loneliness Quotes in Tamil

"இதயம் ஒரு காலி அறை…தனிமையின் எதிரொலி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது."

"பேசத் துடிக்கும் உதடுகள்…ஆனால் வார்த்தைகள் உறைந்து விட்டன"

"உயிரின் உரையாடல் என்னுள் மட்டும்… புரியாத பாஷையாக"

"தனிமையே, நீ என் தோழனா? எதிரியா?"

"மரணத்தை விட கொடுமை இந்த மனத்தனிமை"

Loneliness Quotes in Tamil


காதல் இழப்பும், தனிமையும்

"கை கோர்த்து நடந்த பாதையில்… தனிமையின் முள் குத்துகிறது"

"உன் பெயரைச் சொல்லி அழைத்த இதழ்கள் இன்று அனாதையாய்…"

"என் கனவுக் கோட்டையின் இடிபாடுகள் மட்டும் மிச்சம்…காதல் சென்ற பிறகு"

"நீ இருந்த இடம் வெறுமையாக…வானம் கூட சாம்பல் பூசிக்கொண்டது"

Loneliness Quotes in Tamil

"உன் நினைவுகள் மழைத்துளிகள்…கண்களில் வழிகிறதே தவிர, இதயம் நனைய மறுக்கிறது"

"உன் குரல் கேட்க ஏங்கும் காதுகள்…இந்த மௌனம் கொல்லுதே"

"உடைந்த கண்ணாடியில் உன் முகம்...சிதறிய நினைவுகள் என்னைச் சுடுகிறது"

"காதல் ஒரு மாயை… மிஞ்சுவது தனிமை என்ற நிஜம் மட்டும் தான்"

"நீ சென்ற பிறகு என் உலகம் நிறமிழந்து விட்டது"

Loneliness Quotes in Tamil

"என் காதல் கீதத்துக்கு இசையாய் இருந்தவள் நீ…இப்போது தனி ஓசை மட்டும்"

"இந்த நெஞ்சுக்குள் வெற்றிடம்…உன்னைத் தேடுகிறது"

"உன் மௌனம் என்னைச் சிறை வைத்திருக்கிறது"

"எத்தனை பேர் மத்தியிலும் ஏன் இந்த இதயம் தனித்தே அழுகிறது?"

"உன்னை மறக்கச் சொல்கிறார்கள்…மறப்பதற்கே மறந்து விட்டேனே உன் நினைவுகளைத் தவிர"

Loneliness Quotes in Tamil

"இந்த தனிமையின் இரவுகள் நீள்கின்றன…விடிவெள்ளி எங்கே?"

பிரிவின் பின்னான தவிப்பு

"என்னை உன்னிடம் இருந்து அப்புறப்படுத்தி விட்டதே விதி…தனிமையின் புயலில் சிக்கியவள் நான்"

"தூரம் எம்மைப் பிரித்திருக்கலாம்…ஆனால் உள்ளமோ உன்னோடு தான்"

"கடலும் வானமும் இணையும் எல்லைக்கோட்டில் நான்…உன்னைத் தேடி"

"உன்னைப் பிரிந்த என் இதயம்…ஓர் இலையுதிர்ந்த மரம்"

"நீ என்னுடன் இல்லாத இந்த வாழ்க்கை… அர்த்தமற்ற சொற்றொடர்"

Tags:    

Similar News