ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தாம் கவலை அடைந்ததாக கூறியுள்ளார். இந்த சோகமான தருணத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்து தமது எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.