Begin typing your search above and press return to search.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் உள்ள பெண் காவலர்கள், பெண் நிருபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்