/* */

ஜான்பாண்டியன் இல்ல திருமண விழாவில் மகாராஷ்டிரா அமைச்சர் பங்கேற்பு

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இல்ல திருமண விழாவில் மகராஷ்டிரா அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் பங்கேற்பு.

HIGHLIGHTS

ஜான்பாண்டியன் இல்ல திருமண விழாவில் மகாராஷ்டிரா அமைச்சர் பங்கேற்பு
X

நெல்லை வந்த அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த மகராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- மகாராஷ்டிரா முதலமைச்சர் குறித்து மத்திய அமைச்சர் மரியாதை குறைவாக பேசியது ஏற்கத்தக்கதல்ல. பெரிய பதவிகளில் இருப்பவர்களை மரியாதை குறைவாக பேசுவது நமது பண்பாடு அல்ல. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசக் கூடாது. மகாராஷ்டிராவின் சட்டம் தனித்துவமானது. பேசுவதற்கு முன்பு எதைப்பற்றி பேசுகிறோம் என யோசித்து பேச வேண்டும்.

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மகாரஷ்டிராவில் கொரோனா நோய் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கிராம பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. கிராம பகுதிகளில் 22 மாணவர்களுக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நகர்புறங்களில் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் தெரிவித்தார்.

Updated On: 27 Aug 2021 1:48 PM GMT

Related News