Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் சிறையில் அடைப்பு
தாழையுத்து பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்த குமரய்யா. இவரது மகன் முருகன் என்ற பேய் முருகன்(30). இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்ததால் முருகனை, தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை முருகனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.