Begin typing your search above and press return to search.
கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலியில் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாங்குநேரி ஸ்ரீ மடத்திற்கு பாத்தியப்பட்ட திருநெல்வேலி டவுண் லாலா சத்திர முக்கு லாலா மடம் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி சன்னதியில் மாதந்தோறும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு செய்வதற்கும் உழவார பணிகள் செய்வதற்கும்,திருப்பணி செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மடத்தின் சார்பில் நிர்வாகிகளும், நவமி வழிபாட்டு குழுவை சேர்ந்த மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசுவாமி ,மூர்த்தி ,துரைராஜ் மற்றும் உழவார பணி குழுவை சேர்ந்த ஹைகோர்ட் மகராஜா ,மணிகண்டன் மற்றும் மகாதேவன்,கிருஷ்ணா,முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.