மது அருந்துவதில் தகராறு: நண்பன் அடித்து படுகொலை
தூத்துக்குடி மேலசண்முகபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் மாரியப்பன் (வயது51) இவர் டூவிபுரம் 1வது தெருவில் ஷேர் மார்கெட்டில் வேலை செய்து வருகிறார். அந்த கடையின் எதிர்வீட்டில் வசிக்கும் மணி மகன் வேலுச்சாமி (50) இருவரும் நண்பர்கள். இவர்கள் தினமும் ஒன்றாக மது அருந்துவதும் வழக்கமாக சண்டையிடுவதுமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மது அருந்தும்போது இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி கட்டையால் நண்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவம் இடத்திலேயே வெள்ளைச்சாமி உயிரிழந்தார். தகவலறிந்த மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த வேலுச்சாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.