/* */

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை 2 பேர் கைது :- 278 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது, 278 மதுபாட்டில்கள் போலிசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை  2 பேர் கைது :- 278 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷன் அருகில் தூத்துக்குடி முகமது சதாலிபுரம் பகுதியை சேர்ந்த பாரதிராஜா (42) மற்றும் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் (50) ஆகிய இருவரும்,

தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . மகாராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் ஒருவரும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து பாரதிராஜா மற்றும் சண்முகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் பாரதிராஜா மற்றும் சண்முகராஜ் ஆகியோரிடமிருந்து 208 மது பாட்டில்களும், தாளமுத்து நகரில் 70 மது பாட்டில்களும் என மொத்தம் 278 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 1 May 2021 4:00 PM GMT

Related News