/* */

கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 2:37 AM GMT

Related News