தென்காசி வழியாக செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து
தென்காசி வழியாக செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தென்காசி வழியாக செல்லும், கீழ்கண்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன:
1. இன்று (17.10.21) சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் நாளை அதிகாலை செங்கோட்டை - கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
2. நாளை (18.10.21) கொல்லத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் நாளை கொல்லம் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
3. இன்று (17.10.21) இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலி - புனலூர் இடையே பகுதியாக ரத்து.
4. இன்று (17.10.21) பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் புனலூர் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.