/* */

நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக காேரிய வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக காேரிய வழக்கு ஒத்திவைப்பு
X

சிவகங்கை நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த வழக்கு வரும் ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரம்பட்டி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று திமுக தலைவர் ஆஜராக உத்தரவிட்டு இருந்த நிலையில் வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கிலிருந்து ஸ்டாலினுக்கு ஆஜராவதிலிருந்த விலக்களிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சம்பந்தமாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வருகிற ஏப்ரல் 21-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

Updated On: 10 April 2021 8:15 AM GMT

Related News