/* */

மாற்றப்பட்ட உழவர் சந்தை: புதுக்கோட்டை அதிகாரிகள் ஆய்வு!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட உழவர் சந்தையை இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மாற்றப்பட்ட உழவர் சந்தை: புதுக்கோட்டை அதிகாரிகள் ஆய்வு!
X

புதுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட உழவர் சந்தையை இன்று அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

கொரேனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக சந்தைப்பேட்டை அருகே செயல்பட்டு வந்த உழவர் சந்தை இன்று முதல் புதுக்கோட்டை நகர பேருந்து நிலையத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இன்று காலை முதல் செயல்பட்டுவந்த உழவர் சந்தையை நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் நகர டிஎஸ்பி செந்தில்குமார் நகராட்சி அதிகாரிகள் மற்றும் உழவர் சந்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது தனிமனித இடைவெளியை கடைபிடித்து நகராட்சி அறிவித்துள்ளபடி கட்டத்துக்குள் நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்ல விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என்ன எடுத்துக் கூறினர். ஆய்வில் கோட்டாட்சியர் டெய்சி குமார், தாசில்தார் முருகப்பன் , உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.



Updated On: 11 May 2021 4:23 AM GMT

Related News