/* */

தோல்வியடைந்தவர்கள் புலம்புவார்கள்:பிரசாரத்தில் திருநாவுக்கரசர் பேச்சு

தேர்தலில் தோல்வியுற்றவர்கள் புலம்புவது சகஜம்தான் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

HIGHLIGHTS

தோல்வியடைந்தவர்கள் புலம்புவார்கள்:பிரசாரத்தில் திருநாவுக்கரசர் பேச்சு
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த திருநாவுக்கரசர்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் பழனிச்சாமியை ஆதரித்து, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அம்மாசத்திரம், தொடையூர், காவேரி நகர், பூங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் ஒரு சிலர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

உத்தரப்பிரதேசத்தில், விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டவர்கள் மீதும், காரை ஏற்றிக் கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால் இறந்தவர்களை குடும்பத்தினரை சந்திப்பதற்கு சென்ற பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.னார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசினார். ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், தேர்தல் முடிவை முன்கூட்டியே கணித்து ஜெயக்குமார் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதிமுகவினர் தோற்று விட்டார்கள் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது ஆட்சியிலிருந்து தோற்றவர்கள் இவ்வாறு புலம்புவது சகஜம்தான் என்று, ஓ.பி.எஸ். குறித்த கேள்விக்கு திருநாவுக்கரசர் பதிலளித்தார்.

Updated On: 7 Oct 2021 1:30 AM GMT

Related News