/* */

வீர முத்தரையர் சங்கம், தேசிய பாட்டாளி கட்சி சார்பில் நினைவேந்தல்

புதுக்கோட்டையில், வீர முத்தரையர் சங்கம். தேசிய பாட்டாளி கட்சி சார்பில், நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

வீர முத்தரையர் சங்கம், தேசிய பாட்டாளி கட்சி சார்பில்  நினைவேந்தல்
X

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு, வீரமுத்தரையர் சங்கம் தேசிய பாட்டாளிக் கட்சி சார்பில், அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் 11-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, புதுக்கோட்டை பெரியார் நகரில் நடைபெற்றது. இதில், வீர முத்தரையர் சங்கம், தேசிய பாட்டாளி கட்சி நிறுவனர் கருப்பையா தலைமையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம். அப்துல்லா, மாவட்ட திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட திமுக தொழில்நுட்ப அணியின் இதயம் அப்துல்லா, தேசிய பாட்டாளி கட்சி அவைத்தலைவர் சேதுராமன், மாவட்ட தலைவர் கைலாசம், மாவட்ட துணைத்தலைவர் பாண்டித்துரை, மாவட்டத் துணைச்செயலாளர் லட்சுமணன், அரிமளம் ஒன்றியம் அடைக்கலம், நெடுங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா,அரிமளம் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, இளைஞரணி பொறுப்பாளர் மணி, மூர்த்தி, நாராயணசாமி, மற்றும் ரஜினி அண்ணாமலை உள்ளிட்ட வீர முத்தரையர் சங்க நிர்வாகிகள், தேசிய பாட்டாளி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

Updated On: 7 Oct 2021 9:00 AM GMT

Related News