நீலகிரி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் நாளை (12ம் தேதி) மின்தடை

நீலகிரி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் நாளை (12ம் தேதி) மின்தடை
X

நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், கோத்தகிரி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. (கோப்பு படங்கள்)

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி, கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், நாளை (12ம் தேதி) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி. மற்றும் கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 12ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நியைங்களை சேர்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உப்பட்டி துணை மின் நிலையம்; மின்தடை பகுதிகள்

உப்பட்டி, பொன்னாணி, தேவாலா, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லாமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் பிரேர் மற்றும் நம்பர் 3 டிவிசன் ஆகிய பகுதிகளில், நாளை மின் விநியோகம் இருக்காது.

சேரம்பாடி துணை மின் நிலையம்; மின்தடை பகுதிகள்

சேரம்பாடி டவுன், கன்னம்வயல், சோலை, கையுன்னி, சாலை மாறிய எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்குண்டி மற்றும் சோடாடி ஆகிய பகுதிகளிலும், நாளை மின் விநியோகம் இருக்காது.

கூடலூர் துணை மின் நிலையம்; மின்தடை பகுதிகள்

கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப் பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர், முதுமலை, அத் திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டயவயல், நெலாக் கோட்டை, கார்குடி மற்றும் தேவர்சோலை பகுதியில் நாளை (12ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் துணை மின் நிலையங்களில் நாளை (12ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நியைங்களை சேர்ந்த பகுதிகளில், மின் விநியோகம் இருக்காது எனவும் மின்வாரிய அதிகாரிகள் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story