/* */

வீடு தேடி வரும் காய்கறி, பழங்கள்: கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்களை வீட்டில் இருந்தே வாங்கிக்கொள்ளலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

வீடு தேடி வரும் காய்கறி, பழங்கள்: கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
X

 கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெசந்திரபானு ரெட்டி

காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்களை அவரவர் இல்லங்களில் இருந்தே வாங்கிக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவார காலத்திற்கு தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழ வகைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அவரவர் இல்லங்களுக்குச் சென்று வினியோகம் செய்ய ஏதுவாக காய்கறி வேன்கள் மற்றும் தள்ளுவண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் வினியோகம் செய்ய 30 மினி வேன்களும், அதுதவிர தள்ளு வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விநியோகம் செய்ய 119 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் வினியோகம் செய்ய, 59 மினி வேன்களும், 20 பழ தள்ளு வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களின் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வாங்கிச் செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Updated On: 29 May 2021 6:04 AM GMT

Related News