கரூரில் பாஜக பொங்கல் விழா

கரூரில் ஒரு தொகுதியில் அல்ல இரண்டு தொகுதியில் பாஜக வெற்றி பெறும் : பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன்

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு பேசுகையில், கரூர் மாவட்டத்தில் பாஜக ஓட்டு வாங்காது என்று சொல்லி வருகிறார்கள் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் அல்ல இரண்டு தொகுதியில் வெற்றி பெறும் என பேசினார்.

நம்ம ஊர் பொங்கல் விழாவில் தமிழக பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story