தமிழகஅரசு பொங்கல் பரிசு கரூரில் வழங்கப்பட்டது

3,09,269 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

கரூரில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 9 ஆயிரத்து 269 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் வெங்கமேட்டில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 ரொக்கம் கரும்பு, பச்சை அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக ஏற்கனவே மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு, அதன்படி நாளொன்றுக்கு சுமார் 100 பேருக்கும் குறைவாக பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் உள்ள மூன்று லட்சத்து 9 ஆயிரத்து 269 குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story