தூய்மை பணியாளர் மீது தாக்குதல் காவல் நிலையத்தில் புகார்
கரூர் அருகில் உள்ள ஆண்டான்கோயில் ஊராட்சியில் தூய்மை பணியளராக பணியாற்றுபவர் முருகேசன். இன்று காலை அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது சாலையோரம் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டீக்கடை உரிமையாளர் கார்த்தி என்பவருக்கும் முருகேசனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது இதையடுத்து கார்த்தி தூய்மை பணியாளர் முருகேசனை தாக்கவிட்டாராம்
இதையடுத்து முருகேசனுடன் பணியாற்றும் பணியாளர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்துவிட்டு கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து அடித்து துன்புறுத்திய டீக்கடை உரிமையாளர் கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu