இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவேந்தல்
By - C.A.Kumar, Reporter |30 Dec 2020 10:22 AM GMT
கரூர் மாவட்டம் வானகத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கரூர் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமைக்குடி அமைப்பு சார்பில் கடவூர் வானகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நினைவு இடத்தில் பூமாலை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நம்மாழ்வார் பற்றிய நினைவலைகள்,அவருடன் கலந்துகொண்ட நிகழ்வுகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு,ஜெரால்டு பகிர்ந்துகொண்டார். அவர் நினைவாக வானக வளாகத்தில் அத்தி மரம், நாவல், எலுமிச்சை மரங்கள் போன்றவை நடப்பட்டது
நிகழ்வில் தாந்தோனிமரம் ராமர், வானக தன்னார்வலர் ஏங்கல்ஸ்ராஜா, பசுமைக்குடி அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu