கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
![கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2021/10/08/1344433-img20210921200128.webp)
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலுார், திருநாவலுார், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. ஓட்டுப் பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் ஸ்ரீதர், ஓட்டு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் அறைகளை ஆய்வு செய்தார். அப்போது, 'ஸ்டாங் ரூம்'களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், கட்டுபாட்டு அறையில் காவல் துறையின் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி மேற்கொள்வதை பார்வையிட்டார்.
மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu