Begin typing your search above and press return to search.
ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆசிரியையிடம் 9பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆசிரியையிடம் 9 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழப்பழுவூர் அடுத்த புத்தூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் ஜெயராமன் மனைவி மலர்(47). இவர், அருங்கால் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் இருந்தபோது அடையாள தெரியாத 2 நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டு வந்த நேரம் பார்த்து மலரை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 9 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மலர் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.