தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்றார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் அபார வெற்றி பெற்றது. நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதனையொட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தெலுங்கானாவின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு மோடி கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu