நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? துரை வைகோ பரபரப்பு பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? துரை வைகோ பரபரப்பு பேட்டி
X
துரை வைகோ.
நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து துரை வைகோ பரபரப்பு பேட்டி அளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து திருச்சியில் துரை வைகோ பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில், ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த கையெழுத்து இயக்கத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தற்போது கையெழுத்து இயக்கம் ம.தி.மு.க.வினரால் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை ம.தி.மு.க. தலைமை நிலையசெயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அண்ணா சிலையிலிருந்து சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையம் வரை அவர் நடந்து சென்று பொதுமக்களிடையே கையெழுத்து வாங்கினார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story