உங்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும்.
இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
தற்போது 1000 ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்திய பிறகே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும்.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் செயல் இழந்து விடும் என்றும் பான் கார்டு எண்ணும் முடங்கி விடும் என்றும் ஏற்கனவே மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu