ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-06-26 07:34 GMT
பாரதப்பிரதமர் நரேந்திர மோடி.

ஜெர்மனி நாட்டில், ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில், ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைத்து இருந்தார். இதையடுத்து, இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்று 'ஜி-7' உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார். இன்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.

ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றஅவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் இடையே அவர் 12 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு அவர் நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதாகவும், அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ஜாயெத் அல் நஹ்யானை சந்தித்து பேசுகிறார் எனவும் மத்திய அரசு உயரதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News