சுவாமி நித்தியானந்தா அடுத்த அதிரடி அறிவிப்பு: சமூக வலைதளங்களை கலக்கும் சர்ச்சை..!

சுவாமி நித்தியானந்தா அடுத்த அதிரடி அறிவிப்பு, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது சீடர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Update: 2022-06-25 07:51 GMT
சர்ச்சை சாமியார் சுவாமி நித்தியானந்தா (கோப்பு படம்).

தமிழகத்தில் சுவாமி நித்தியானந்தா குறித்து சர்ச்சைக்கு பஞ்சமில்லை. அதனால் இளம் வயதிலேயே உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் அவர் இளம் வயதில் இருந்ததாக புகைப்படங்கள் வெளியாயின. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நித்தியானந்தா சீடர்கள் ஆஸ்ரம் அமைத்தனர். இந்நிலையில் பெங்களூரு அருகே பிடதி ஆஸ்ரமத்தை நித்யானந்தா நிரந்தரமாக அமைத்து தங்கினார்.

இந்த ஆஸ்ரமத்தில் பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாகவும், பாலியல் தொல்லை தந்ததாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. இதனால் காவல்துறை நெருக்கடிக்கு ஆளான நித்தியானந்தா கைது நடவடிக்கைக்கு பயந்து, திடீரென தலைமறைவானார்.

பின்னர், கைலாசா என்னும் தனித் தீவு நாட்டை வாங்கி குடியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் நித்தியானந்தா அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இதன்மூலம் அவரது தீவிர சீடர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். குறிப்பாக பெண் சீடர்கள் முகநூல் பக்கங்களை ஏற்படுத்தி, நித்தியானந்தா குறித்து வசைபாடுவோருக்கு பாட்டு பாடியும், பேசியும் பதிலடி தந்து வந்தனர்.

இந்த சூழலில் தான் நித்யானந்தா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் சமாதி அடைந்துவிட்டதாகவும் அடுத்தடுத்து தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நித்தியானந்தாவும் தனக்காக வேண்டிக்கொள்ளுமாறு உலகெங்கும் இருக்கும் தமது சீடர்களை கேட்டுக்கொண்டார். பின்னர், திரும்ப வந்துட்டேன் என, நடிகர் வடிவேலு பாணியில் சுவாமி நித்தியானந்தா தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதமும், புகைப்படமும் வெளியானது.

இப்போது, அடுத்த அதிர்ச்சி அறிவிப்பாக மத்திய ஆப்பிரிக்க நாடான கானா நாட்டில் உள்ள எப்புடு மாவட்ட நிர்வாகத்துடன் கலாச்சார உறவை மேம்படுத்த கைலாசா நாடு கைகோர்த்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை கைலாசா, தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.

தலைமறைவாக இருக்கும் போதும், பரபரப்புக்கும் சர்ச்சைக்களுக்கும் சுவாமி நித்தியானந்தா தீனி போட்டு வருவது தான் அவரது தீவிர ஆதரவாளர்களை மன ஆறுதல் படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

நித்தியானந்தா குறித்த மர்மத்திரை விலகுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்..!

Tags:    

Similar News