ராணுவ ஒத்துழைப்பு, சர்வதேச பெருந்தொற்று குறித்து இந்தியா-ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை

Update: 2021-09-11 18:05 GMT

இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான '2+2' அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான '2+2' அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கும் இரு அமைச்சர்களை வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய-ஆஸ்திரேலிய விரிவான மூலோபாய கூட்டின் முக்கியத்துவத்தை இந்த பேச்சுவார்த்தை குறிக்கிறது. வெளிப்படையான, சுதந்திரமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் வளமிகுந்த இந்தோ-பசிபிக்கிற்காக பகிர்ந்து கொண்டுள்ள லட்சியத்தின் அடிப்படையில் முக்கியமான கூட்டை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பகிர்ந்து கொண்டுள்ளன. ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளத்தில் இரு ஜனநாயகங்களுக்கும் பொதுவான அக்கறை உண்டு.

இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து அமைச்சர் பாய்ன் மற்றும் அமைச்சர் டுட்டனுடன் இன்றைக்கு விரிவான மற்றும் ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ ஒத்துழைப்பு, சர்வதேச பெருந்தொற்றுக்கு எதிரான போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பலதரப்பட்ட அமைப்பு சார்ந்த கட்டமைப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தான், கடல்சார் பாதுகாப்பு, பல விதங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்.

சுதந்திரமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்கான தேவை, சர்வதேச விதிகளை பின்பற்றி நடப்பது, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பொருத்தவரையில், பல்வேறு சேவைகளில் ராணுவ செயல்பாடுகளை நீட்டிப்பது என்றும், ராணுவ தகவல்களை அதிகளவில் பகிர்ந்து கொள்வது என்றும், பரஸ்பர ஆதரவுக்காக நெருங்கி பணியாற்றுவதென்றும் நாங்கள் முடிவெடுத்தோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News