விருதுநகர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மற்றாெரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் படுகாயம்.

Update: 2022-02-23 13:59 GMT

விருதுநகர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பட்டம் புதுரை சேர்ந்த ஜெயக்குமார் (33) சம்பவ இடத்தில் உயிரிழப்பு. மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் படுகாயம் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர் எலக்ரிட்சியன் வேலை செய்து வருகிறார். இன்று சிவகாசி பகுதிக்கு எலக்ட்ரிசியன் வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் ஆர்.ஆர்.நகரில் இருந்து முதலிபட்டி வழியாக சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த செல்வம் (29), சுந்தர்ராஜ்,(26) முனியாண்டி (20) ஆகிய மூவரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த பொழுது முதலிபட்டி அருகே எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் எதிர் எதிரே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எலக்ட்ரிசியன் ஜெயக்குமார் என்பவர் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்து விரைந்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் ஜெயக்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு காயமடைந்த சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த செல்வம், சுந்தர்ராஜ், முனியாண்டி ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவ மனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News